Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்..!

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் அமைச்சர்  திட்டவட்டமாக மறுத்தார்.

தமிழகத்தில் 10 மற்றும் 11,12ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்த விவரங்களை செங்கோட்டையில் விளக்கினார். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |