பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் குதிரைசாரிகுளம் பகுதியில் தில்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பிரியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் முத்துபிரியாவிற்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்தது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை வாங்கி வைத்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக முத்து பிரியா செல்போனை கேட்டு வீட்டில் பெற்றோருடன் சண்டை போட்டு சாப்பிட மறுத்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் முத்துப்பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு வரைந்து சென்று முத்துபிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.