தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திரத்தில் பாஜகவின் ‘பி’ டிம்மாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும், பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நடிகர் பவன் கல்யாண் பேசியனார்.
அப்போது பேசிய அவர் “நான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு ‘பி’ டிம்மாக உள்ளேன் என கூறுவதை ஏற்க முடியாது. இனி இது போல் பேசினால் செருப்பால் அடிப்பேன் என கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். இதனையடுத்து முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை அவசரமாக சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.