கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை இந்திலியில் இருக்கும் டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இங்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு 25 வயது முதல் 35 வயதுடைய நபர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து 3 வருடங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 3 வயது உடைய ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜி.என்.எம், டி.எம்.எல்.டி அல்லது உயிரி அறிவியல் பிஎஸ்சி தாவரவியல், பயோ வேதியியல், மைக்ரோ பயாலஜி, விலங்கியல், பயோடெக்னாலஜி ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய 9154250864, 9154250856 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் கூறியுள்ளார்.