தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட நிலையில் இட ஒதுக்கீட்டை பிரிவினருக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களில் பொதுப் பிரிவினருக்கு 40 வயதில் இருந்து 45 ஆகவும் மற்றவர்களுக்கு 40 விருந்து ஐம்பதாகவும் உயர்த்தி இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராகி வருவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.