Categories
மாநில செய்திகள்

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க!…. அப்பட்டமாக மீறப்பட்ட கோட்பாடுகள்….. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு….!!!!

பொதுப் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே ஆகும். அதாவது, பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ் சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் மருத்துவ இளநிலை பட்டப் படிப்பு அகில இந்திய இடங்களுக்கான அனுமதியில் இந்த கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓ.பி.சி. இடங்களோ 6 மட்டுமே உள்ளது.பொதுப் போட்டியில் தேர்வான 2163 ஓ.பி.சி மாணவர் எண்ணிக்கை , இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனை தொடர்ந்து ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலைப் பட்ட காலியிடங்கள் எவ்வளவு?, ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன ?, பொதுப் போட்டியில் தேர்வான ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன?, ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு மூலம் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் பிரிவு வாரி எவ்வளவு?, பொதுப் போட்டியின் மூலம்  அனுமதி பெற்ற ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள், ஓ.பி.சி,எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கிலும் சேர்க்கப்பட்டு உள்ளனரா? ஆம் எனில் எத்தனை? முழு விவரங்களை வெளியிடுமாறு கோரியுள்ளேன். இதனையடுத்து இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓ. பி. சி மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மாணவர் அனுமதியிலும் இந்தகோட்பாடு மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மருத்துவக் கல்வி அனுமதிகளில் ஓ. பி. சி இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு போராடி, நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழகம் முன்னின்றது. ஆனால் இன்றும் அதை சிதைக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. இதை அனுமதிக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |