சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமலானது. அதன்படி பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.