Categories
தேசிய செய்திகள்

எல் கே ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை… “டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!!

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் நான்கு வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த சிறுமி மனம் உடைந்து அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பின் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார் மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிறுமி குற்றம் செய்தவரை சுட்டிக்காட்டி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர் பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர் அவரை போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரஜினி குமார் என்பவர் பள்ளியில் ஆய்வகங்களை பராமரித்தல் மற்றும் ஊழியர்களுக்கான வேலைகளை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் ரஜினி மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் மற்ற பெற்றோர்களும் ரஜினி பற்றி முதல்வரிடம் புகார் அளித்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ்கர் கூறியுள்ளனர்.

Categories

Tech |