Categories
உலக செய்திகள்

“இந்த தகவல் சீனாவிற்கு முக்கியமானவையாக இருக்கும்”…? இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை…!!!!!

இங்கிலாந்தில் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா அதிகமான தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்திற்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் பணிபுரிவதற்கு எதிராக இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த சூழலில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து விமானிகள் மூலம் மேற்கத்திய நாடுகளின் ராணுவ விமானங்கள் மற்றும் விமானிகள் செயல்படும் விதம் போன்ற தகவல்களை சீனா புரிந்து கொள்ளும் எனவும் ஒருவேளை தைவானுடன் மோதல் ஏற்பட்டால் இந்த தகவல் சீனாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து சீனாவின் இத்தகைய ஆட்சியர் திட்டங்களை நிறுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |