தமிழகத்தில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொறுப்பு என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் நின்றபடி பல சாகசங்கள் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் பொறுப்பு என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதாவது மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்தால் அறிவுறுத்துங்கள். மீறினால் காவல் நிலையத்தில் நிறுத்தலாம் அல்லது 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டிப்பவர்கள் மிரட்டப்படும் நிலையே தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.