10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு வரதன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்த விஷ்ணுவரதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.