மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் அறிவழகன்(9). இந்நிலையில் அறிவழகன் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் சில வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.