Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச விமான நிலையங்கள் 5 மணி நேரம் மூடல்” வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் தான் அதிக அளவில் விமானங்கள் இயங்குகிறது. இந்த விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் ஓடுபாதை வழியாக இயக்கப்படுகிறது. அதன் பிறகு மும்பை விமான நிலையம் ஆனது தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் அதானி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பருவமழைக்கு பிறகு வருடாந்திர பணிகள் மேற்கொள்ளப்படும் என மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்படும். மேலும் இதனால் பல்வேறு விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |