தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இ சேவை மையங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி கல்வி மாநில திட்டத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலமாக உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்.பின்னர் அந்த விண்ணப்பங்களில் இருக்கும் தகவல்கள் சரியானது என உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக மின் கையொப்பம் செய்து சான்றிதழை பதிவேற்றம் செய்து விட வேண்டும்.
தவறாக இருக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பத்தை உரிய காரணத்துடன் ஆன்லைன் மூலமாக நிராகரிக்க வேண்டும்.இனி வரும் நாட்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆன்லைன் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.