தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி மற்றும் தளபதி விஜயை மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயின் 67-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்ததும் தளபதி 67 திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 போன்ற திரைப்படங்களை இயக்குவார் என்று ரசிகர்கள்ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது மிகப்பெரிய டுவிஸ்ட்டாக கேஜிஎஃப் நாயகன் யஷ்ஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விக்ரம் 2 மற்றும் கைதி 2 படங்களுக்காக ஆவலோடு காத்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு யஷ் மற்றும் லோகேஷ் கூட்டணி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.