Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேச மாட்டேன் சொல்லிட்டான்….. அப்பா இறந்த 4வது நாளில்….. மகள் தற்கொலை….!!

தூத்துக்குடி அருகே நண்பன் பேசாததால் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் பகுதியை அடுத்த அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர்  தேவநேசன். இவரது கணவர் சாமுவேல் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் ஒரு மகன் இருந்தனர். அதில் மூத்த மகள் அமுதா பிகாம் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் அமுதா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நெருக்கமாக நட்பாக பழகி வந்துள்ளார்.

அவர் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வர். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் சில நாட்களாக அமுதாவிடம் பேசாமல் இருக்க மனமுடைந்த அமுதா தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதில், அவர் தாய் அந்த பையனை மறந்துவிடு என்று  கூறியும் தொடர்ந்து விரக்தியில் காணப்பட்ட நிலையில்,

நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை உள்புறமாக தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்டு அதிர்ந்து போன அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அமுதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்க தாய் கதறி அழுதார். பின் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பன் பேசாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |