Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின் கம்பி மீது ஏறிய மொபட்…. தூக்கி வீசப்பட்ட தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அழகியபுதூர் பகுதியில் விவசாயியான முருகேசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா(16) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் தனது மகளுடன் மொபட்டில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பி மீது மொபட் ஏறியது. இதனால் மின்சாரம் தாக்கி தந்தை, மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனை அடுத்து படுகாயமடைந்த தந்தை, மகள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |