Categories
உலக செய்திகள்

ருசியோ ருசி….! விரைவில் மனிதர்கள் பூச்சிகளை சாப்பிட அனுமதி….. அரசு போட்ட திட்டம்….!!!!

சீனா போன்ற ஒரு சில நாடுகளில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனமாக கொடுப்பதற்கும் அனுமதிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவனத் தொழில்துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியது. இதற்கு அனுமதி கிடைத்தால் மனிதர்கள் வண்டுகள், பூச்சிகள், தேனீக்கள், அந்து பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ள முடியும்.

இதுகுறித்து உணவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்ட பிறகு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிக ரீதியாக பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை ஊக்குவித்து வருவதாக தெரிவித்துள்ளார்

Categories

Tech |