Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 2-வது நாளாக ரோப் கார் சேவை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

புகழ்பெற்ற பழனி முருகப்பெருமான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்பிறகு பழனி முருகன் கோவில் மலை மீது இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் வசதி மற்றும் ரோப் கார் சேவை போன்றவைகள் இருக்கிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையைத்தான் விரும்புகிறார்கள். ஏனெனில் ரோப் கார் சேவையில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பயணிகளுக்கு ரோப் கார் வசதி தான் பிடித்திருக்கிறது‌.

இந்நிலையில் ரோப் கார் சேவையில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நேற்று ரோப் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதை, யானை பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |