கடந்த மாதம் செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்து மதம் குறித்து ஆ. ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஆ.ராசாவின் பேச்சு மதன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஆ ராசா மீதான புகாரில் எந்த குற்றமும் நிரூபணமாகாததால் அது முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல்துறையின் விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது