ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மொடச்சூரில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி வால்டர் தேவராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மட்டுமே ஆரம்பகாலத்தில் ரைபிள் சூட்டிங் இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் பிறகு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழித்தால் மட்டுமே குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை சுட்டுக் கொள்ள வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் எப்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறதோ, அதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர் களுக்கும் கடுமையான தண்டனையை கொண்டு வர வேண்டும். சட்டங்கள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும். மேலும் பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை வெளியே கூறும் அளவிற்கு தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.