Categories
உலக செய்திகள்

உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்…. பிரபல நாட்டின் “பிரதமர் மீது அதிகரிக்கும் வெறுப்பு”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பிரபல நாட்டில்  புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்  தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் வரி குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனவே பிரதமர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்தை எம்.பி.க்கள் கூறினர். இந்த நிலையில் நிதி மந்திரியாக இருந்த குவாஸி  குவார்டங்கை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ்  உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய மந்திரியாக ஜெர்மி ஹன்ட்  என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவரின் இந்த அதிரடி முடிவு  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கட்சித் தலைவராகவும், பிரதமராக ரிஷி சுனக்  மற்றும் பென்னி மோர்டான்ட்  துணை பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற முடிவை முன்னெடுப்பது குறித்து ஆளும் கட்சி எம்.பி.கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். மேலும் சட்ட ரீதியாக 12 மாதங்கள் வரை லீஸ் டி.ரஸ் பதவியை விட்டு விலக முடியாது. அதனால் எம்.பி.க்கள் சட்ட விதிமுறைகளை மாற்றுவதற்கு வாக்களித்து அவற்றை மாற்றினால் பிரதமரை மற்ற ஒன்றரை வருடம் காத்திருக்க வேண்டாம். மேலும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் விசுவாசிகள் இத்தகைய சதி நடவடிக்கை ஜனநாயக விரோத செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது. அரசாங்கம் என்பது பாட்டிலை சுழற்றிவிடும் விளையாட்டு அல்ல. இத்தகைய நடவடிக்கை பிரதமரை பதவி நீக்கம் செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தை தவிர்க்க நடத்தப்பட்ட சதி எனக் கூறியுள்ளார். இதனையடுத்து வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் கூறியதாவது. லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அவரை மாற்றுவது பற்றி யோசிப்பது அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத் துறையிலும் பேரழிவு தரும் மோசமான யோசனையாக இருக்கும் என அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |