கால்வாயில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ராஜகால்வாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று காளை மாடு ஒன்று தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் குப்பை மற்றும் கழிவுகளை இந்த பகுதியில் கொட்டுவதால் அதனை உண்பதற்காக வரும் ஆடு, மாடுகள் ராஜ கால்வாயில் தவறி விழுகிறது. எனவே இங்கு குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.