இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது. எங்கள் தமிழ்நாட்டில் இந்தி எந்த வடிவில் வந்தாலும் சரி நாங்கள் ஒரே ஒரு பதிலை தான் சொல்லுவோம். அது இந்தி தெரியாது போடா என்பதுதான். நீங்கள் இந்த முயற்சியை கைவிடும் வரை நாங்கள் இந்தி தெரியாதுபோடா என்று உங்களிடம் சொல்லிக் கொண்டே தான் இருப்போம்.
அதையும் மீறி நீங்கள் திணிக்க முயன்றால் டெல்லிக்கும் சென்று நாங்கள் போராட தயாராக உள்ளோம். கடந்த 2010-ஆம் ஆண்டு தேர்தலில் உங்களை எப்படி விரட்டி அடித்தோமோ அதேபோல் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் விரட்டுவோம். ஏனென்றால் ஒன்றியம் என்று சொன்னால் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம். ஏனென்றால் இப்போது ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என அவர் கூறியுள்ளார்.