சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியா நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ராணுவ வீரர்களை குறி வைத்து அவர்களது பேருந்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.