தமிழகத்தில் இந்த வருடம் வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்ல விருப்பப்படுகின்றார்கள். வெளியூர் பயணிகளுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்துள்ளது. எனினும் விடுமுறை நாட்கள் ஆன ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கின்றனர்.
இதனை அடுத்து அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள ஆயிரம் பேருந்துகளில் 670 பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டது. மேலும் சில பகல் நேர பேருந்துகளில் மட்டுமே இருக்கை காலியாக இருக்கிறது. இந்த நிலையில் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கின்றனர். பிற போக்குவரத்து கழகங்கள் இயக்கும் பேருந்துகளுக்கான முன்பதிவு வருகிற 20-ம் தேதி பேருந்து நிலையங்களில் தொடங்குகிறது. சென்னையில் கோயம்பேடு, மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் சிறப்பு முன் பதிவு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும்.