Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த கோரிக்கையை நிறைவேத்துவாங்களா….? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரயில்வே மேம்பாலத்திற்காக பொதுமக்கள் 21 வருடங்களாக காத்திருக்கின்றார்கள்.

சென்னை அருகே ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ரயில்வே கடவுப்பாதை இருந்தது. இங்கே மூன்று உயர்நிலைப்பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தார்கள். சென்ற 2001 ஆம் வருடம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ரயில்வே கடவுபாதை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியதாக இருந்தது. இதனிடையே கடவு பாதை மூடப்பட்ட பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக சென்ற 2018 ஆம் வருடம் 2 கோடியே 29 லட்சத்தை ரயில்வே துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆலந்தூரிலிருந்து ஆதம்பாக்கத்துக்கு பாதாள சாக்கடைக்கு முக்கிய குழாய் செல்வதால் அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடியாது என திட்டமானது கைவிடப்பட்டது. சென்னை மாநகராட்சி ஒதுக்கிய நிதியில் இப்பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ரயில்வே மேம்பாலத்திற்காக 21 வருடங்களாக காத்திருக்கும் தங்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |