Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூபாய் 4 கோடி மதிப்பில்…. புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

ரூபாய் 4 கோடி செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பம் பகுதியில் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் வடுக்கந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்பு களுக்காக மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதனால் வேப்பங்கநெரி, கே.வி குப்பம், முருகன் குப்பம், தேவரிஷி குப்பம், நாகல், காங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3900 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும்.

இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவானது மேல்மாயி சாலையில் நடைபெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் ரூபாய் 4,06,21,000 மதிப்பில் புதிதாக டிரான்ஸ்பார்மர்களும் 342 உயர் மின்னழுத்த கம்பங்களும் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் பரிமளா தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சுபாஷினி, உதவி பொறியாளர், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |