Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முதியோர் இல்லத்தில் இருந்து 61 பேர் மீட்பு…. என்ன காரணம்….? அதிரடி காட்டிய கலெக்டர்….!!!!

முதியோர் இல்லத்தில் இருந்து சாப்பாடு இல்லாமல் தவித்த 61 முதியோர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குகையநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியார் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த முதியோர் இல்லத்தில் 37 ஆண்கள் உட்பட 61 முதியவர்கள் தங்கியுள்ளனர். தனியார் சார்பாக நடத்தப்படும் இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு சரிவர சாப்பாடு வழங்கப்படவில்லை என்ற புகார் மாவட்ட கலெக்டருக்கு வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உதவி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட உதவி கலெக்டர் பூங்கொடி குறித்த கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு முதியவர்களிடம் விசாரணையும் நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் அங்கு தங்கியிருக்கும் முதியவர்கள் தங்களுக்கு சாப்பாடு சரிவர வழங்கவில்லை எனவும் உடல்நிலை சரியில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்தில் உள்ள 61 முதியோர்களையும் மீட்டு அவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |