Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரை நிர்வாண போராட்டம்…. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…. மின்வாரிய ஊழியர்கள் அதிரடி….!!!!

மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண கோலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது அகவிலைப்படி மூன்று சதவீத உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும், மேலும் மின்வாரிய அரசாணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் மின்வாரியம் பொது துறையாக தொடர வேண்டும், மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு தேனி மாவட்ட கிளை தலைவர் பெருமாள் சாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தின் போது மின்வாரிய ஊழியர்கள் பலர் சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |