Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!…. நாடு முழுதும் மின்சார வாகனங்களுக்காக…. ரயில்வே நிர்வாகத்தின்‌ சூப்பர் பிளான்…..!!!!

இந்தியாவில் அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். இந்தியாவில் ரயில் சேவையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

மொத்தம் 46 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் நிலையில், மலிவு விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் ரயில்வே அலுவலகங்கள் மற்றும் ரயில்வே நிலைய வளாகங்களில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் போது அவர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |