Categories
மாநில செய்திகள்

போனஸ் கேட்டு கொடுக்காததால்.. தூய்மை பணியாளர் செய்யும் காரியம்…? இணையத்தில் வைரல்..!!!!

தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் தூய்மை பணியாளர் ஒருவர் கடையின் வாசல் முன்பு குப்பை கொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா ரோட்டில் கருத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த நான்காம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது அப்போது இவர் 20 ஆம் தேதிக்கு பின் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 500 கேட்டு அவர் தொந்தரவு செய்யவே இருவருக்கும் டேய் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் கடை முன் இருந்த குப்பையை எடுத்து வாசலில் கொட்டிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு கொடுக்காத கடை முன்பு தூய்மை பணியாளர்கள் சிலர் குப்பையை கொட்டி செல்வது வழக்கமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றார்கள். மேலும் வலுக்கட்டாயமாக வியாபாரிகளிடமிருந்து தீபாவளி போனஸ் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உண்மையாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |