Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா” ஆபாசமாக திட்டி தாக்கிய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் பெரியசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் வரதட்சனை கேட்டு பெரியசாமி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக் கூறி பெரியசாமி உஷாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த உஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பெரியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |