பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக சஜித்கான் இருக்கிறார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சஜித்கான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 16-ல் தற்போது கலந்து கொண்டுள்ளார். இதற்கு நடிகை மந்தனா கர்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு நடிகை மந்தனா சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததால் தான் சினிமாவை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகை மந்தனா டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மற்றும் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் இயக்குனர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதிலிருந்தே அவர் எவ்வளவு மோசமானவர் என்பது தெரிய வருகிறது. இப்படிப்பட்ட ஒருவரை சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படி சேர்க்கலாம். எனவே சஜித்கானை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்குங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஹிந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா சோப்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சஜித்கான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு காமக்கொடூரனை எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் அறிமுகப்படுத்தலாம் என்று பதிவிட்டுள்ளார்.