Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. “இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு”…. பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் தினசரி நான்கு லட்சம் பயணிகள் விமான சேவை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை எட்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனை படைத்த இந்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், இது எளிதாக வாழ்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் .

அதனைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவது துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ட்விட்டர் பதிவை மேற்கொள் சுட்டிக் காட்டி பிரதமர் கூறியது, இது சிறந்த அறிகுறி இந்தியா முழுவதும் இணைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இது எளிதான வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும் என்று பாராட்டி உள்ளார்.

 

Categories

Tech |