Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. வைஃபை வசதியுடன் ஸ்மார்ட் கால்குலேட்டர்…. வியாபாரிகளுக்காக இந்தியரின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

இந்தியாவைச் சேர்ந்த start அப் நிறுவனம் வைபை மூலம் இயங்கும் புதிய ரக கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த கால்குலேட்டர் வணிக நிறுவனத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மகராஷ்டிராவில் தொடங்கப்பட்ட டூஹேண்ட் எனும் நிறுவனம் பிரவீன் மிஸ்ரா, சத்யம் சாஹு மற்றும் சண்முக வடிவேல் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இவர்கள் வணிக நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி ஒரு காகிதத்தில் கணக்கு எழுதி வைத்துவிட்டு அந்த கணக்கை பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதை பார்த்துள்ளனர். இதன் காரணமாகத்தான் தற்போது ஸ்மார்ட் கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த கால்குலேட்டரில் 50 லட்சம் கணக்குகளை சேமித்து வைக்கலாம். ‌ மேலும் கால்குலேட்டருடன் 2400-mAh திறன் கொண்ட பேட்டரியும், சி-ஜார்ஜிங் போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |