Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 5 வருடங்களுக்குப் பின்” புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதன்படி 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்புற சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த சுகாதார மையங்களை அமைப்பதற்கான இடங்கள் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு தமிழகத்தில் புதிதாக 6 இடங்களில் மருந்து கிடங்குகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 மருந்து கிடங்குகளுக்கும் தலா 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Categories

Tech |