செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரமானது பிரிக்கப்பட்டுள்ளது செந்தி பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரமானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ள நிலையில் அவர் மீது நிதி விசாரணை நடத்த உத்தரவாணத்தை பிறப்பிக்கப்படுகிறது
தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2011 – 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவ சகாயம், அன்னராஜி உள்ளிட்டவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.
அவை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு நடைபெற்று வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புகார் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் நீதிபதி சிவஞானம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, அவர் மீதான புகார்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த புகார்கள் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தாக்கல் மனுவை ஏற்றுக் கொண்டார்.