கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள தலப்புழா பகுதியில் ஜோகி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தவறி விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுக்குள் இருந்து சிறுத்தையின் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை தொடர்ந்து முதுமலையிலிருந்து ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்ட பல்வேறு கட்டங்களாக போராடி சிறுத்தையை மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்கு பாதுகாப்பாக விட்டுள்ளனர்.