சிவப்பு நிறத்தை கலந்து நூதன முறையில் பெண்கள் போராடி வருகின்றனர்.
ஈரான் நாட்டில் ஒன்பது வயதிற்கும் அதிகமான சிறுமிகள் ஹிஜாப் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக அந்நாட்டில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாஷா அமினி என்ற பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மேலும் கடந்த மாதம் 17ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து அந்நாட்டில் உள்ள பெண்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் அணிந்திருந்த ஹிஜாபை கழற்றி வீசியும் தீ வைத்து எரித்தும் உள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. மேலும் இது பெரும் வன்முறையாக மாறியதில் சுமார் 150 திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத அந்நாட்டு மக்கள் பல்வேறு நூதன முறைகளில் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ந்து காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஈரான் நாட்டில் இருக்கும் பொது நீரூற்றுகளில் சிவப்பு நிறம் கலந்து அந்நாட்டு மக்கள் தங்களுடைய எதிர்ப்பை தீவிரமாக காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.