Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு நீதி வேண்டும்”…. தாசில்தார் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி…. ஆரணியில் பரபரப்பு….!!!!!!

ஆரணி தாலுக்கா அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீரா. இத்தம்பதியினருக்கு மௌலீஸ்வரி என்ற மகள் இருக்கின்றார். ரமேஷும் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் ரமேஷ் மீராவை தினமும் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த மீரா கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும் எனக் கூறி மகளுடன் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பாக நேற்று முன்தினம் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அவர் நீதி வேண்டும், எனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ நீதி வேண்டும் என கூறினார். இதை அடுத்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனடியாக தண்ணீர் கேனுடன் வந்து அவர் மீது ஊற்றி விட்டார்கள். மேலும் மாற்று உடைகளை வாங்கித் தந்தார்கள். இதன்பின்னர் தாசில்தார் மற்றும் அலுவலர்கள் மீராவை சமாதானம் செய்தார்கள். மீரா சேத்துப்பட்டு தாலுகாவை சேர்ந்ததால் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கு சென்று இது சம்பந்தமாக மகளிர் போலீசார் உங்களை தொடர்ந்து விசாரணை நடத்தி நிரந்தர முடிவு எடுப்பார்கள் எனக் கூறி மீராவை அனுப்பி வைத்தார்கள்.

Categories

Tech |