Categories
உலக செய்திகள்

இவர் வெளியேறியது தான் அனைத்திற்கும் காரணம்… கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் அரண்மனையை விட்டு, ஒரு அதிகாரி வெளியேறியதற்கு இளவரசர் வில்லியம் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனையிலிருந்து வெளியேறிய Sir Christopher Geidt என்ற அதிகாரி,  பொறுப்பில் இருந்திருந்தால் ஹாரி மற்றும் மேகன் நிச்சயம் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்று இளவரசர் வில்லியம் கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த Sir Christopher Geidt, இளவரசர் வில்லியம் மற்றும் மகாராணியார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.

சுமார், 15 வருட காலங்களாக அரண்மனையில் பணிபுரிந்த அவர், மகாராணியாரின் பிள்ளைகளான மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் கடந்த 2017 ஆம் வருடத்தில் கட்டாயமாக அரண்மனை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால் இளவரசர் வில்லியம் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவர், அந்த கோபத்தை பல அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டிருக்கிறது.  அதாவது, Sir Christopher Geidt வெளியேறிய பிறகு தான் மகாராணியார் மற்றும் அரச குடும்பத்திற்கிடையே இடைவெளி அதிகரித்திருக்கிறது என்றும் அது சரிப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகத்தான் ஹாரி-மேகன் இருவரும் அரண்மனையிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், Sir Christopher Geidt மகாராணியாரின் மனநிலை எப்போது எப்படி இருக்கும் என்று மிகவும் சரியாக புரிந்து கொள்வாராம். அதற்கு தகுந்த வகையில் அரச குடும்பத்தினரிடம் பேசுவாராம்.

எனினும், அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸிற்கும் இவருக்கும் பல நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இளவரசர் ஆண்ட்ரூ, அரச குடும்பத்திலிருந்து தான் விலக்கப்படுவதற்கு Sir Christopher Geidt தான் காரணம் என்று நம்பியதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |