Categories
தேசிய செய்திகள்

மகப்பேறு சிகிச்சையின் போது 7ம் வகுப்பு மாணவி, குழந்தை பலி… நடந்தது என்ன…? பெரும் சோகம்…!!!!!

மகப்பேறு சிகிச்சையின் போது ஏழாம் வகுப்பு மாணவி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கந்தம்மால் மாவட்டத்தில் உள்ள ரெய்கியா சமுதாய சுகாதார மையத்தில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த 13 வயது சிறுமிக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அந்த சிறுமி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெல்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுதி நிர்வாகி பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உடனடியாக குழந்தைகள் நல ஆணையம் முன்பு சிறுமி ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் அக்டோபர் மாதம் பிரசவ வலி ஏற்பட்டு காப்பகத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் பின் குழந்தையையும் சிறுமியையும் ரெய்கா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போதே குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |