சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் விளக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதைப் பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரையில் மாணவர்களுக்கான பயிற்சிகள் தொடரும்.மேலும் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் பிரசாரம் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.