மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.கொத்தனூர் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபு(32) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபு அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி(22), ராமச்சந்திரன்(26) ஆகியோர் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை விருதாச்சலம் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கண்டப்பன்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.