Categories
தேசிய செய்திகள்

என்னடா சோதனை..! நேற்று முன்தினம் எருமை மாடு…. நேற்று பசு மாடு…. மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்….!!!!

இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. காலை 11.15 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் மீது எருமை மாடுகள் மோதியது. இதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ரயிலின் முன்பாகமானது பிளாஸ்டிக் பைபரில் தயாரிக்கப்பட்டது. இதில் ரயில் இன்ஜினுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து சேதமடைந்த முன்பகுதி 24 மணி நேரத்திற்குள் மாற்றப்பட்டது. மேலும் எருமை மாடு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மறுமார்க்கத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மீண்டும் மும்பை நோக்கி சென்ற போது ஆனந்த் ரயில் நிலையம் அருகே பசு மாடு மீது மோதியது. இதில் ரயில் முன்பு சேதம் ஏற்பட்டது

Categories

Tech |