Categories
குழந்தை வளர்ப்பு

குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… காரணங்களும், குணப்படுத்தும் முறைகளும்! 

குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல சிவப்பாக வரும். சிவப்பான பருபோல வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. எனினும் இது நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தாய் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றம் குழந்தையின் உடலிலும் ஏற்பட்டு அது அப்படியே தங்கி இருப்பதால் ஏற்படலாம். 

காரணங்கள் : 

  • குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் பால் பருக்கள் ஏற்படலாம். 
  • ஒத்துக்கொள்ளாத வானிலை மாற்றத்தால் குழந்தை அவதிப்படுதல். 
  • தாய்ப்பாலோ, எச்சிலோ குழந்தையின் முகத்தில் இருக்கும் போது சரியாக சுத்தம் செய்யாமல், பராமரிக்காமல் இருத்தல். 
  • இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்னை அதிகமாக இருப்பின் சரும மருத்துவரையோ குழந்தை நல மருத்துவரையோ அணுகுவது நல்லது.  

சரி செய்யும் முறைகள் : 

  • எப்போதுமே குழந்தைக்கு கெமிக்கல்கள் இல்லாத அல்லது குழந்தைக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மைல்டான சோப்களை பயன்படுத்த வேண்டும்.
  • ஹோம்மேட் சோப் தயாரித்து குழந்தைக்கு பயன்படுத்துவது நல்லது. இதனால் அதிக கெமிக்கல்கள் இருக்காது.
  • குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது, குளிக்க வைக்கும்போதெல்லாம் கை சுத்தமாக இருக்கிறதா எனப் பரிசோதித்து கொள்வது நல்லது.
  • குழந்தைக்கு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சிந்தடிக் ஆடைகளைத் தவிர்க்கலாம். அதிக டிசைன், ஃப்ரில், மணிகள் பதித்தது, ஜமிக்கி, ஜரிகை போன்ற அதிக வேளைப்பாடுகள் உள்ளவற்றைத் தவிர்க்கலாம்.
  • பருக்கள் வந்த இடத்தில் தாங்களாக எந்த கிரீம், லோஷன் வாங்கி தடவ வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்தால் பயன்படுத்தலாம்.
  • குழந்தைகளின் ஆடைகளைத் துவைக்க, மைல்டான சோப்பு தூள், துணி சோப் பயன்படுத்துவது நல்லது. சிலர் குழந்தைக்கு மூலிகை குளியல் பொடி, நலங்கு மாவு போன்றவற்றை பயன்படுத்துவர். இதுவும் குழந்தையின் சருமத்துக்கு ஏற்றது.
  • தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை குழந்தைகளுக்கு பயன்படுத்தினாலே குழந்தையின் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். பேபி மசாஜ் எண்ணெய்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தில் தடவி குளிப்பாட்டி வந்தாலும் குழந்தைக்கு எந்த சரும பிரச்னையும் வராது.

Categories

Tech |