Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய்….? மகனை கண்டித்த தந்தை….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரா சோழபுரம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கண்ணன் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |