Categories
உலக செய்திகள்

சத்தமில்லாமல் 12,000 ஊழியர்கள் டிஸ்மிஸ்… மெட்டா நிறுவனத்தின் அதிரடி முடிவு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

மெட்டா நிறுவனம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியாக இந்த நடவடிக்கையை ‘குய்ட் லேஆப் ‘அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்ற மெட்டா நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் விளம்பர வருவாய் தொடர்ந்து நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக செயல்திறன் குறைவாக இருக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணிநீக்கம் செய்ய மார்கர் ஜூக்கர்பெர்க் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிறுவனத்தில் ஆட்குறைப்பு பொறுப்பு பல மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனவும் அவர்கள் அமைதியாக இந்த பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்களின் செயல் திறன் மதிப்பீட்டு சிறப்பாக பணியாற்றாத ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் சந்தை போட்டி வருவாயில் வீழ்ச்சி நிர்வாக சீரமைப்பு போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது நடைபெற இருக்கிறது. இதன் அடிப்படையில் அடுத்த சில வாரங்களில் சுமார் பன்னிரண்டாயிரம் ஊழியர்களை பேஸ்புக் வெளியேற்ற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Categories

Tech |