வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மின்சார துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் சென்னையில் இருப்பவர்கள் நேரடியாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பூமி கம்பிகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருத்தல் அனைத்து மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள், கழிவுநீர் உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள் மற்றும் குடிநீர் வினியோகம் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பது பற்றி பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இறுதி கட்டத்தில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மின்சார துறையில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.